Tamilnadu
பதவியேற்று 99 நாளில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைப்பு... நிறைவேறிய தேர்தல் வாக்குறுதி!
கடந்த அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக தமிழ்நாடு கடும் நிதிச்சுமையில் சிக்கியுள்ள நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.
2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல் விலையை குறைத்துள்ளது தி.மு.க அரசு.
நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், “பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்கவேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பெட்ரோல் மீதான வரியில் ரூ. 3 குறைக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கும், நடுத்தர குடும்பங்களுக்கும் இந்த விலை குறைப்பு பெரும் நிவாரணமாக அமையும்.
பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரி குறைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ1,160 கோடி இழப்பு ஏற்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!