Tamilnadu
“செல்ஃபி மோகம்.. கூவம் ஆற்றில் விழுந்த வாலிபர்” : போராடி மீட்ட போலிஸார் !
சென்னை பெரியமேட்டைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் இன்று காலை நேப்பியர் பாலத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிகாலை மிகவும் அழகாக இருந்ததால், பாலத்திலிருந்து தனது செல்போனில் செல்ஃபி எடுக்க நினைத்துள்ளார்.
அதன்படி, கார்த்தி தனது செல்போனில் பாலத்தின் அருகே நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விழுந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அண்ணா சதுக்கம் போலிஸார் சில மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு கார்த்திக்கை மீட்டனர்.
பின்னர், அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் கூவத்தில் விழுந்ததை உடனடியாக தகவல் கொடுத்த நபரை போலிஸார் பாராட்டினர்.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?