Tamilnadu
அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து டெண்டர்களில் ஊழல்.. 2வது நாளாக தொடரும் சோதனை : எஸ்.பி.வேலுமணி விரைவில் கைது?
அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அரசு ஒப்பந்தங்களைத் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் கோவையில் உள்ள அவரது வீட்டில் முக்கிய ஆவனங்களை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவரது வீட்டில் இருந்த லாக்கருக்கான சாவி ஒன்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவனங்கள் குறித்தும் ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல், டெண்டர் முறைகேடு வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
அதேபோல், சொத்துக்குவிப்பில் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டது தெரியவந்தால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் போலிஸார் திட்டமிட்டுள்ளனர். இதானல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!