Tamilnadu
“பிரியாணிக்காக கூடுன கூட்டம் இல்ல..”: அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தபோதே லெஸ்ஸி கடையில் அலைமோதிய பா.ஜ.கவினர்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக பா.ஜ.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த அண்ணாமலை நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பா.ஜ.க சார்பில் தஞ்சை மாவட்டம் பனகல் பில்டிங் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றர்.
பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயலாமல் தன் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்பும் வகையிலேயே அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பதாக முன்னதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று உன்ணாவிரதத்தின்போது பேசிய அண்ணாமலை, “மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விவசாயிகூட பட்டினியால் சாகவில்லை. இங்கு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்திருக்கும் கூட்டம் பிரியாணிப் பொட்டலங்களுக்கும், டீ-சர்ட்டுக்காகவும் வரவில்லை. விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அறப் போராட்டத்துக்காக வந்துள்ளனர்.
தமிழக அரசியலில் யாராவது பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம். பா.ஜ.கவை மீறிப் பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கை வைப்போம்” என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்திருக்கும் பா.ஜ.கவினர் பிரியாணிப் பொட்டலங்களுக்கும், டீ-சர்ட்டுக்காகவும் வரவில்லை என அண்ணாமலை பேசிய அதேநேரத்தில், அப்பகுதியில் இருந்த லெஸ்ஸி கடையில் பா.ஜ.க வினரின் கூட்டம் அலைமோதியது.
இதுகுறித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!