Tamilnadu
மேற்கூரையை உடைத்து கல்லா பெட்டியில் கைவைப்பு; தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவி தப்பிய பலே கில்லாடி!
சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் இந்தப் பகுதியின் வியாபாரி சங்க தலைவராக உள்ளார். இவர் கே.கே.நகர் பகுதியில் கடந்த 43 வருடங்களாக மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர் டேவிட்டின் மளிகை கடையின் மேல் கூரையை உடைத்து கல்லாப் பெட்டியில் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் டேவிட் தன்னுடைய மளிகை கடையை திறப்பதற்காக சென்றபோது கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் போலீசார் விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக இவருடைய கடையில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் வெளியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் மட்டும் கொள்ளையடித்து சென்றார்களா அல்லது இரண்டு, மூன்று பேர் வந்து கொள்ளையடித்துச் சென்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
வியட்நாமில் கவிழ்ந்த சுற்றுலாப் படகு.. 10 தமிழர்கள் பலி.. மகிழ்ச்சியான இடத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்!
-
நெல்லையில் நடந்த கொடூரம்.. சுற்றி வளைத்த கும்பல்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல்.. அச்சத்தில் மக்கள்!
-
“இனிமையும் இளமையும் மாறாத குரல்.. கானகோகிலம் எஸ்.ஜானகி மறைவு பேரிழப்பு” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘இசை உலகின் மகுடம் எஸ்.ஜானகி காலமானார்.. 17 மொழிகள்.. 40,000+ பாடல்கள்.. காலத்தால் அழியாத குரல்’
-
‘பவர் சென்டர்’ ஆக முயற்சிக்கும் ஆளுநரின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் : கி.வீரமணி எச்சரிக்கை!