Tamilnadu
மேற்கூரையை உடைத்து கல்லா பெட்டியில் கைவைப்பு; தடயத்தை மறைக்க மிளகாய் பொடி தூவி தப்பிய பலே கில்லாடி!
சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் இந்தப் பகுதியின் வியாபாரி சங்க தலைவராக உள்ளார். இவர் கே.கே.நகர் பகுதியில் கடந்த 43 வருடங்களாக மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர் டேவிட்டின் மளிகை கடையின் மேல் கூரையை உடைத்து கல்லாப் பெட்டியில் உள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல் டேவிட் தன்னுடைய மளிகை கடையை திறப்பதற்காக சென்றபோது கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் உடனடியாக அருகில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தில் புகார் அளித்த பின் போலீசார் விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக இவருடைய கடையில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் வெளியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஒருவர் மட்டும் கொள்ளையடித்து சென்றார்களா அல்லது இரண்டு, மூன்று பேர் வந்து கொள்ளையடித்துச் சென்றார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!