Tamilnadu
சிறுமிக்கு பாலியல் தொல்லை... தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல் : வாலிபர் போக்சோவில் கைது!
வேலூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது வீட்டின் வெளியே பாத்திரம் கழுவிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளங்கோவன் என்பவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த சிறுமி சத்தம் போட்டு அலறியுள்ளார். மகளின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சிறுமியின் தந்தை வெளியே வந்துள்ளார். அப்போது சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அங்கு நின்றிருந்த இளங்கோவை தட்டுக்கேட்டுள்ளார்.
அப்போது இளங்கோவன் சிறுமியின் தந்தையைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் இளங்கோவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியின் தந்தை இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் இளங்கோவன் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!