Tamilnadu
“மாவீரன் அண்ணாமலையையே கர்நாடகாவுக்கு தூதுவராக அனுப்புவோம்” : தயாநிதி மாறன் கிண்டல்!
கர்நாடகாவுக்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் மேகதாது அணையை கர்நாடக பா.ஜ.க அரசு கட்டியே தீருவோம் என அடம்பிடித்து வருகிறது. புதிதாக கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் இதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளார். கர்நாடக பா.ஜ.க அரசின் முடிவை எதிர்த்து, ஆகஸ்ட் 5ல், தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்தபோது, “நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடன். எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க கன்னடன்.” எனப் பேசியிருந்தார் அண்ணாமலை.
பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயலாமல் தன் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்பும் வகையில் கண் துடைப்புக்காகவே அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், “கர்நாடகாவில் பா.ஜ.க அரசுதானே ஆள்கிறது? கர்நாடகாவில் இருந்து வந்த அண்ணாமலை அங்கு சென்று மேகதாது அணை வேண்டாம் என பேசலாமே?
சுமுக தீர்வு காண கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?