Tamilnadu
“நகை வாங்குவது போல் நடித்து பல நகைகடைகளில் கைவரிசை” : CCTV காட்சிகள் மூலம் வசமாக சிக்கிக் கொண்ட தம்பதி!
சென்னை முகப்பேர் வளையாபதி சாலை உள்ள லஷ்மி ஜூவல்லரியின் உரிமையாளர் ப்ரீத்தம் குமார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக நகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26 ஆம் தேதி கடையில் பணிபுரியும் கைலாஷ் என்பவர் வாடிக்கையாளரிடம் 3 சவரன் எடை கொண்ட ஆறு நகைகளைக் காண்பித்துள்ளார்.
அப்போது அந்த வாடிக்கையாளர் அதில் ஒரு நகையை தேர்வு செய்து, ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்து வருவதாகக் கூறி விட்டு நகைக்கடையிலிருந்து வெளியே வந்துள்ளார். பிறகு நீண்ட நேரமாக அவர் வரவில்லை. இதையடுத்து நகையைப் பரிசோதித்த போது, அதில் ஒரு நகை மட்டும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த வாடிக்கையாளர் பணம் எடுத்து வருவதாகக் கூறி விட்டு வெளியே செல்லும் நேரத்தில் ஒரு நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இதுகுறித்து நகைகடையின் உரிமையாளர் போலிஸில் புகார் கொடுத்தார்.
பின்னர் இதுதொடர்பாக ஜே.ஜே.நகர் காவல்துறையினர் சி.சி.டி.வி ஆய்வு செய்து தாட்சாயினி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் சந்திரகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர். குறிப்பாக தாட்சாயினி மீது ஏற்கனவே ஆவடி, பூந்தமல்லி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, பூக்கடை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக பல வழக்கு பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை