Tamilnadu
தி.மு.கவில் இணைந்த அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் & 3 கவுன்சிலர்கள்... சிவகங்கை ஒன்றியக்குழு இனி தி.மு.க வசம்!
சிவகங்கை அ.தி.மு.க ஒன்றிய சேர்மன் மஞ்சுளா பாலச்சந்தர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்துள்ளார்.
சிவகங்கை ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் அ.தி.மு.கவில் 8 பேர், பா.ஜ.க, தே.மு.தி.கவில் தலா ஒருவர் என 10 கவுன்சிலர்கள் அ.தி.மு.க வசம் இருந்தனர். தி.மு.கவில் 6 பேர், காங்கிரஸில் ஒருவர் என 7 கவுன்சிலர்கள் தி.மு.க கூட்டணியில் இருந்தனர். ஒருவர் அ.ம.மு.க கவுன்சிலராக இருந்தார்.
அ.தி.மு.கவைச் சேர்ந்த மஞ்சுளா பாலச்சந்தர் தலைவராகவும், கேசவன் துணைத் தலைவராகவும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.ம.மு.க கவுன்சிலர் பத்மாவதி தி.மு.கவில் இணைந்தார்.
இந்நிலையில், சிவகங்கை ஒன்றியக் குழு தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தனது ஆதரவு கவுன்சிலர்களான அ.தி.மு.கவைச் சேர்ந்த வேல்முருகன், லட்சுமி சரவணன், தே.மு.தி.கவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோருடன் இன்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.
இதனால் சிவகங்கை ஒன்றியக்குழுவில் தி.மு.கவின் பலம் 12-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சிவகங்கை ஒன்றியக்குழு தி.மு.க வசம் வந்துள்ளது.
Also Read
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!