Tamilnadu
வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடத்திய பா.ஜ.க பிரமுகர்: தொடர் குற்றங்களில் சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள்!
சென்னை எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலிஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நகர் பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலிஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. உடனடியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர்.நகர், சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த விஜயகுமார், பாண்டியராஜன், ரவி, லோகநாதன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பைனான்ஸ் அலுவலகத்திற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை எம்.ஜி.ஆர்.நகர் பா.ஜ.க பிரமுகரான விஜயகுமார் வீடு வாடகைக்கு எடுத்து, கட்டணம் வசூலித்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. தொடர்ச்சியாக பல்வேறு குற்றவழக்குகளில் பா.ஜ.க.வினர் சிக்கி வருவது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!