Tamilnadu
“இது என் ஏரியா.. என்னை கேட்க நீ யார்” : நடுரோட்டில் போலிஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் : நடந்தது என்ன ?
சென்னை நொளம்பூரை அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக வீட்டின் அருகே ஜல்லி, மணல் கொட்டிவைத்துள்ளார். இதையடுத்து சாலையில் மணல் ஜல்லியைக் கொட்டி வைத்தாகக் கூறி வாலிபர் ஒருவர் வீடு கட்டும் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர் நொளம்பூர் காவல்நிலையத்தில், அந்த வாலிபர் மீது புகார் செய்துள்ளார். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஏன் இப்படி தகராறு செய்கிறீர் என்று கேட்டுள்ளார்.
இதற்கு, அந்த வாலிபர், “என் ஊரில் வந்து என்னை கேட்க நீ யார், நீ எந்த ஏரியா” என மிரட்டும் தோணியில் கேட்டுள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸாருக்கு மிரட்டல் விடுத்தது சென்னீஸ்குமார் என்பது தெரியவந்து. பிறகு அவரை கைது போலிஸார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!