Tamilnadu
“இது என் ஏரியா.. என்னை கேட்க நீ யார்” : நடுரோட்டில் போலிஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் : நடந்தது என்ன ?
சென்னை நொளம்பூரை அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக வீட்டின் அருகே ஜல்லி, மணல் கொட்டிவைத்துள்ளார். இதையடுத்து சாலையில் மணல் ஜல்லியைக் கொட்டி வைத்தாகக் கூறி வாலிபர் ஒருவர் வீடு கட்டும் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர் நொளம்பூர் காவல்நிலையத்தில், அந்த வாலிபர் மீது புகார் செய்துள்ளார். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஏன் இப்படி தகராறு செய்கிறீர் என்று கேட்டுள்ளார்.
இதற்கு, அந்த வாலிபர், “என் ஊரில் வந்து என்னை கேட்க நீ யார், நீ எந்த ஏரியா” என மிரட்டும் தோணியில் கேட்டுள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸாருக்கு மிரட்டல் விடுத்தது சென்னீஸ்குமார் என்பது தெரியவந்து. பிறகு அவரை கைது போலிஸார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!