Tamilnadu
”தூர்வாரும் பணி தொடங்கியாச்சு; இனி கலங்க வேண்டாம்” -சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன அமைச்சர் K.N.நேரு
சென்னை தலைமை செயலகத்தில், நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்திற்கு பின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
”கோயம்புத்தூர் , சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த ஆட்சியில் துறை வாரியாக நடைபெற்ற தவறுகள் மற்றும் டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் துறை வாரியாக புகார்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மழைநீர் தேங்காத அளவிற்கு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களில் தண்ணீரை சுத்தப்படுத்தி மழைநீரை சேமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சென்னையில் 330 கழிவுநீர் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல சென்னையில் பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்காத அளவிற்கு பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருகிறது.
நகராட்சி தேர்தலை பொருத்தவரை மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு பின்பு தேர்தல் தேதியை முதல்வர் அறிவிப்பார்.”
எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இந்திய அரசியலில் மத வெறுப்பு அதிகரித்துள்ளது...” - நடிகை வித்யா பாலன் ஓபன் டாக் !
-
குஜராத் மாநிலத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த பா.ஜ.க வேட்பாளர்கள்!
-
கொளுந்துவிட்டு எரிந்த கட்டடம்... யோசிக்காமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய துணிகர சிறுவனுக்கு பாராட்டுகள் !
-
”கொஞ்சம் கூட கருணை இல்லாத மோடி அரசு” : செல்வப்பெருந்தகை விமர்சனம்!