Tamilnadu
நேற்று கழகம் அறிவித்தது... இன்று தன் பிறந்தநாள் போஸ்டரை அகற்றிய குளித்தலை எம்எல்ஏ: குவியும் பாராட்டு!
பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிட வேண்டும் என்றும், மீறும் கழகத்தினர் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என நேற்று தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அறிவிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து தி.மு.க சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களும், சுவர்களின் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை தொண்டர்கள் அகற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்தின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு இடங்களில் சுவர் போஸ்டர்களை தொண்டர்கள் ஒட்டியுள்ளனர். இதை அறிந்த மாணிக்கம் எம்எல்ஏ உடனே ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்ற வேண்டும் என தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், அவரே போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த இடங்களுக்குச் சென்று, ஒட்டப்பட்ட போஸ்டர்களை அகற்றும் அவரை அங்கேயே இருந்தார். பின்னர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அவரின் ஆதரவாளர் உடனே அகற்றினர்.
இது குறித்து எம்.எல்.ஏ மாணிக்கம் கூறுகையில்," எனது பிறந்த நாளையொட்டி ஆதரவாளர்கள் பள்ளி சுவர்களின் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே போஸ்டரை அகற்ற வேண்டும் என கூறி அவர்களை எச்சரித்தேன்.
மேலும் இந்த சுவர்களின் போஸ்டர்கள் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு, சுவரிலிருந்த திருக்குறள் வாசகமெல்லாம் அழிந்துவிட்டது. எனவே அந்த சுவரை முழுமையாகச் சுத்தம் செய்து வெள்ளை அடித்து, மீண்டும் திருக்குறள் வாசகம் இடம் பெற வேண்டும் என ஆதரவாளர்களிடம் கூறியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!