Tamilnadu
அதிக வட்டிக்கு கடன்: பணம் வசூலிக்க அரிவாளால் மிரட்டிய அதிமுக பிரமுகர்? கைதான பைனான்சியர்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால், இவர் அதே பகுதியில் விநாயகா பைனான்ஸ் நடத்தி வரும் சுபாஷ் என்பவரிடம் 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதிமுக பிரமுகரான சுபாஷிடம் கடனுக்கு வட்டியாக மட்டும் 1.50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபால் பெற்ற அசல் தொகையான 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும் என சுபாஷ் மிரட்டி தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து கோபால் அங்கு சென்ற போது, சுபாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்த கொண்டு பெரிய அரிவாள் ஒன்றை காட்டி தன்னிடம் பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராவிட்டால் இந்த அரிவாளை கொண்டு அவர்களது கதையை முடித்து விடுவேன் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன கோபால் அங்கிருந்து புறப்பட்டு அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெரிய வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!