Tamilnadu
அதிக வட்டிக்கு கடன்: பணம் வசூலிக்க அரிவாளால் மிரட்டிய அதிமுக பிரமுகர்? கைதான பைனான்சியர்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால், இவர் அதே பகுதியில் விநாயகா பைனான்ஸ் நடத்தி வரும் சுபாஷ் என்பவரிடம் 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அதிமுக பிரமுகரான சுபாஷிடம் கடனுக்கு வட்டியாக மட்டும் 1.50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கோபால் பெற்ற அசல் தொகையான 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டும் என சுபாஷ் மிரட்டி தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். இதனையடுத்து கோபால் அங்கு சென்ற போது, சுபாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்த கொண்டு பெரிய அரிவாள் ஒன்றை காட்டி தன்னிடம் பணம் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராவிட்டால் இந்த அரிவாளை கொண்டு அவர்களது கதையை முடித்து விடுவேன் என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன கோபால் அங்கிருந்து புறப்பட்டு அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பெரிய வீச்சரிவாள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சுபாஷை போலீசார் கைது செய்தனர்.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!