Tamilnadu
திருமணநாளன்று மணமகனை வெட்டிக் கொன்ற தந்தை...மதுரையில் பரபரப்பு!
மதுரை மாவட்டம், கவுண்டன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் பிரதீப். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 18 வயது ஆகாத சொந்தக்கார பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிரதீப்புக்கும், அந்த பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்து, ஞாயிறன்று திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, திருமணத்திற்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று குடிபோதையிலிருந்த பிரதீப்புக்கும், தந்தை இளங்கோவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன் அங்கிருந்த கோடாரியால் மகன் பிரதீப்பைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், இளங்கோவன் நேரடியாகக் காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி போலிஸாரிடம் சரணடைந்துள்ளார். பின்னர் சம்பவ இடம் பெற்ற போலிஸார் பிரதீப் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முந்தைய நாளன்று மகனைத் தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!