Tamilnadu
“12,500 கிராமங்களுக்கு தடையின்றி இணைய சேவை.. விரைவில் முதலமைச்சர் தொடங்கிவைப்பார்”: அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழ்நாட்டில் 12,500 கிராம ஊராட்சிப் பகுதிகளுக்கு தங்கு தடையின்றி Fiber Net மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைப்பார் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு முழுவதும் கிராமங்களுக்கு தங்குதடையின்றி இணைய சேவை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் கிராமங்களுக்கு தங்குதடையின்றி fiber net மூலம் இணைய சேவை வழங்கப்படும். கிராமங்களுக்காக இணைய சேவை திட்டத்தின் மூலம் சுமார் 12,500 கிராமங்கள் பயன்பெறும்.
இந்தத் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர ஒரு வருடம் வரை ஆகும் என்பதால், மாற்று ஏற்பாடாக மற்ற இணைய சேவை அமைப்புகளை ஒருங்கிணைத்து கிராமப்பகுதிகளுக்கு இணைய சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை அவர்களே குப்பையில் போட்டுவிட்டனர். பல திட்டங்கள் தரமற்ற முறையில் உள்ளன. பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. இந்த திட்டங்களை சர்இ செய்வதே பெரும் சவாலாக இருக்கிறது.
தற்போதைய தி.மு.க ஆட்சியில், தமிழ்நாட்டு மக்களின் உரிமைகள் மீட்கப்படும். மேகதாது அணை விவகாரத்தில் தெளிவான முடிவை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார்.” என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தினை வகைகள் கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல்... 3 நாட்கள் அரசு பயிற்சி.. விண்ணப்பிப்பது எப்படி?
-
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு பெற்ற முதலீடு ரூ.6.70 லட்சம் கோடி! : ஒன்றிய அரசின் MSME EPC தகவல்!