Tamilnadu
“ஜூலை 12-க்குள் 15.86 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க ஒன்றிய அரசு உறுதி”: சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உறுதி!
ஜூலை 12-ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சந்தித்து தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து ஒன்றிய அரசிடம் எடுத்துரைத்தோம். கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
தடுப்பூசி உற்பத்தியில் உள்ள சவால்கள், தரச் சான்றிதழ் ஆகியவற்றால் தாமதமாவதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவித்தனர். ஜூலை 12ஆம் தேதிக்குள் 15.86 லட்சம் டோஸ் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவுப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளனர். காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்காலிக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரியுள்ளோம். தமிழ்நாட்டிற்கான கொரோனா நிதியை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும் ஒன்றிய அரசு விளக்கம் தந்தது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!
-
இனிதே நிறைவுற்ற பேச்சுவார்த்தை... திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? - விவரம்!
-
வேறு பெண்ணுடன் உறவு... தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... அதிமுக பிரமுகர் மீது புகார்!