Tamilnadu

“எழும் கதிரவன் என்றும் மறைவதில்லை” : கழக அரசு இரவு பகலெனப் பாராது உழைப்பதை புகழ்ந்துரைக்கும் கார்ட்டூன் !

வலைதளங்களில், மேற்காணும் கார்ட்டூனும் -“RISING SUN NEVER SETS” எனும் தலைப்பிட்டு, அதன் கீழே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்களும் கொண்ட பதிவொன்று, வைரலாகப் பரவி வருகிறது.

தமிழகத்தின் மேன்மைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவர்கள் தலைமையிலான கழக அரசும் இரவு பகலெனப் பாராது பாடுபடுவதைப் புகழ்ந்துரைக்கும் வரிகள் அவை!

அதன் தமிழாக்கம் இதோ : “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அரசு நிர்வாக இயந்திரம் அதிவேகமாக சுற்றிச் சுழன்று செயல்படத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் புதிய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள், எந்த நேரத்திலும் பணியாற்றிட அதிகாரிகளை வலியுறுத்தி, செயல்படச் செய்கிறார்.

தற்போதெல்லாம் இரவு 1.30 மணி அளவில்தான் உறங்கச் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் விழித்துக் கொள்கிறார். பிறகு சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு, காலை 5.30 மணிக்கெல்லாம் பணியாற்றப் புறப்படுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டுமல்ல, அவரது அமைச்சர்களும் காலம்பாராது பணியாற்றுகிறார்கள்.

“தங்களுக்கு உழைத்திட ஒருநாளில் 24 மணி நேரம் போதவில்லை” எனும் முனகல் ஓசை, தலைமைச் செயலக வளாகத்தில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “ஏழை எளிய மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?” : ‘தினகரன்’ ஏடு கேள்வி!