Tamilnadu
“சமூக இடைவெளியை கடைப்பிடித்தால் கொரோனா 3-வது அலை வராது” : மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பேட்டி!
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் இதுவரை 10 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பளவு 3% குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தால்தான் கொரோனா மூன்றாவது அலை வராது. மேலும் வரும் வாரங்களில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டது என்பதற்காகப் பொதுமக்கள் கவனக்குறைவின்றி செயல்படக் கூடாது.
அதேபோல், கொரோனா நமக்கு இல்லை என்று எண்ணிவிடக் கூடாது. டெங்குவை எப்படி ஒழித்தோமோ அதைப்போல் கொரோனாவை ஒழிக்கச் செயல்பட வேண்டும். கொரோனா விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக மக்கள் மாற்ற வேண்டும்
கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகளை மறைப்பதாகக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. கொரோனா மரணங்களைத் தமிழ்நாடு அரசு மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை.கொரோனா இறப்பை குறைத்து காட்டுவதாக கூறப்படுவது தவறான குற்றச்சாட்டாகும் ” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!