Tamilnadu
“ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை அதிரடி நடவடிக்கை மூலம் சீரமைத்துள்ளோம்” : அமைச்சர் மூர்த்தி!
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சந்தோஷம் நகர், புதிய ஜி.ஆர்.நகர், அல் அமீன் நகர் ஆகிய பகுதிகளில் மின்மாற்றி மற்றும் ஆழ்துளைக் கிணறு உள்ளிட்டவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, “முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மதுரையில் மின்சாரம் தடையின்றி கிடைக்க 10 உப மின்நிலையங்கள் மற்றும் போர்வெல்கள் என தி.மு.க ஆட்சிக்கு வந்த 50 நாட்களிலேயே பல்வேறு மக்கள் நல திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவுக்கே வெற்றி கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். சட்டமன்ற தேர்தலின் போது கருவாடு மீனாகாது என்று சொன்னவர்கள் அவர்கள். ஆனால், நடந்ததே வேறு.
பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியின் குளறுபடியால் பல்வேறு துறைகளில் 34000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார துறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது. தமிழ்நாட்டின் ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை, அதிரடியான முடிவுகள் எடுத்து சீரமைத்து வருகிறோம்.
நிர்வாகத் திறமையற்ற அ.தி.மு.க அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கல்லைக் கூட வைக்கவில்லை. நாங்கள் அதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். மக்கள் செல்வாக்கு எங்களுக்கே உள்ளது என்பதற்குச் சான்று தான் இப்போதைய ஆட்சி. இனி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அது தொடரும்.
2019-20 ஆண்டில் வேலூரில் போலி பத்திர முறைகேடு நடைபெற்றுள்ளது. அது போன்ற செயல்கள் இனி நடைபெறக் கூடாது என்ற காரணத்தினால் பதிவுத்துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!