Tamilnadu
“பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஆலோசனை- விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்”: அமைச்சர் மூர்த்தி தகவல்
சென்னை தியாகராய நகரில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துறையாடலில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 17 சட்டமன்ற உறுப்பினர்கள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா, வணிக வரித்துறை ஆணையர் சித்திக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக ஆன்லைன் பதிவு நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமிக்கும் பணி விரைவில் நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்மட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் விலை குறைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஜி.எஸ்.டி-க்கு முன்பு வாட் வரி அமலில் இருந்த காலத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்றளவும் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, போலி பில் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், பொருட்களை விற்பனை செய்யாமல் பில் மட்டும் போட்டு வரி ஏய்ப்பு செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் பேசிய வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “11 ஆண்டுகளுக்குப் பிறகு வணிகர்களை அழைத்து, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜி.எஸ்.டி வரி குறித்து எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி உள்ளோம்.
துணிக்கடை, நகைக்கடைகளை திறப்பது தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க உள்ளோம். விரைவில் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்கிற செய்தி வரும் என்று நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!