Tamilnadu
புதுச்சேரி: எம்.எல்.ஏவுக்கு அமைச்சர் பதவி கேட்டு பாஜக அலுவலகத்தையே அடித்து நொறுக்கிய பா.ஜ.க தொண்டர்கள் !
புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜான்குமார் காமராஜ் நகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போன்று அவரது மகனும் நெல்லிதோப்பு தொகுதியில் வெற்றி பெற்று தற்போது அவரும் அவரது மகனும் சட்டமன்ற உறுப்பினராக பா.ஜ.கவில் உள்ளனர்.
இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சிறுபான்மை பிரிவை சேர்ந்த அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக மாற்று நபருக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதனால் காமராஜ் நகர் தொகுதி மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகம் முன்பு குவிந்து ஜான் குமார் அவர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது பதாகையை வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே திடீரென அலுவலக முன்புள்ள ஷட்டரை உடைத்து பா.ஜ.க தலைமை அலுவலக பேனரை கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும் அவர்களை சமாதானப்படுத்தி இது குறித்து மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து ஒரு மணி நேரமாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதேபோல் ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் நெல்லித்தொப்பு சிக்னலில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியனர்.
இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் பா.ஜ.க அலுவலகத்தை சூறையாடியதாக பா.ஜ.க எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது ரெட்டியார்பாளையம் போலிஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!
-
தமிழ்நாடு அரசின் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி.. எங்கு? எப்போது? எப்படி விண்ணப்பிப்பது? - விவரம்!
-
நெல் கொள்முதல் விவகாரம்: அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் Data-வுடன் பதிலடி.. - விவரம் உள்ளே!
-
போலி விவசாயி... பொய் மூட்டை வியாபாரம்... - அவதூறு பரப்பிய பழனிசாமியை வறுத்தெடுத்த முரசொலி!
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!