Tamilnadu
மதுரையில் கலைஞர் நூலகம், கி.ராவுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் தீவிரம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு !
சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு எ.வ.வேலு தலைமையில் திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளோடு ஆய்வு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் பின்வருமாரு :-
மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகம், கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை, கி.ராஜநாராயணன் மணி மண்டபம் அமைப்பதற்கான மதீப்பீடுகள் வரைபடங்களை விரைந்து வழங்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், 11 இடங்களில் கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களை இந்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்த தரவுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கொரோனா காலத்தில் 12,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை அமைத்த பொறியாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Also Read
-
இந்தியாவிற்கு ஏற்பட்ட மற்றொரு தலைகுனிவு : சர்வதேச செய்தியான பிரஜ்வல் பாலியல் விவகாரம் - குவியும் கண்டனம்!
-
“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!
-
குடும்பத்தினருக்காக அரசாணை வெளியிட்டாரா EPS? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
-
காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா? : வைகோ ஆவேசம்!
-
’பன்முகக் கலைஞர்’ : 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து பாடம்!