Tamilnadu
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் தொடக்கம் - வாக்குறுதியை நிறைவேற்றிய தி.மு.க MLA !
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த மழையால் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
சேதத்தில் இருந்து தப்பிய நெல்லை கொள்முதல் செய்ய தனியார் வியாபாரிகள் தயக்கம் காட்டியதுடன் விவசாயிகளிடமிருந்து நெல்லை குறைந்த விலைக்கே நெல்லை கேட்டதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து மணப்பாறை பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். சட்டமன்ற தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
தி.மு.க ஆட்சி அமைந்ததும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதாக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், மணப்பாறை அருகே ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தெற்குசேர்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இன்று நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை ஸ்ரீரங்கம் தி.மு.க எம்.எல்.ஏ பழனியாண்டி தொடங்கி வைத்தார்.
முன்னதாக கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, பின்னர் நெல் கொள்முதல் நிலைய பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான விவசாயிகள் தங்களது நெல்லை விற்பணைக்காக கொண்டு வந்திருந்தனர். தங்களது கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!