Tamilnadu
சென்னை ரிப்பன் மாளிகையில் ‘தமிழ் வாழ்க! தமிழ் வளர்க’ பெயர் பலகை திறப்பு !
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாளான (ஜூன் 3) இன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக "தமிழ் வாழ்க தமிழ் வளர்க" என்னும் பெயர் பலகையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் ஆகியோரும், சட்டமன்ற உறுப்பினர்கள், தாயகம் கவி, ஐ.ட்ரீம்ஸ் மூர்த்தி, மாதாவரம் சுதர்சனம், பரந்தாமன், ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!