Tamilnadu
“மூன்று வாரத்திற்கு முன்பு இருந்த நெருக்கடி தற்போது இல்லை” : அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!
பொதுமக்கள் முழு ஊரடங்கை முறையாகப் பின்பற்றினால் இன்னும் சீக்கிரமாகவே இரண்டாவது அலையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனி வேவல் தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தமிழகத்தில் மூன்று வாரத்திற்கு முன்பு இருந்த நெருக்கடியான சூழல் தற்போது இல்லை. முதல்வரின் அதிரடி நடவடிக்கையான தமிழகம் சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதேபோல், மதுரையிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் குறுகிய காலத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவில்லாமல் கொண்டு வர இயலாத கருப்பு பூஞ்சைக்கான மருந்து மற்றும் தடுப்பூசி மட்டும் தேவையான அளவு இல்லையே தவிர மற்ற அனைத்து வகையிலும் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
தடுப்பூசியைப் பொறுத்தவரையில் தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையைக் குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!