Tamilnadu
கொரோனாவை அடுத்து பூஞ்சை நோய்க்கும் மாநிலம் முழுவதும் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது - அமைச்சர் தகவல்!
கரும்பூஞ்சை வைரஸ் தொற்றை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கரும்பூஞ்சை வைரஸ் பரிசோதனை மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை அறிந்துகொள்ளும் டிஜிட்டல் பலகை மற்றும் கரும்பூஞ்சை பரிசோதனை மையத்தில் தொடங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தில் இதுவரை 518 பேருக்கு கரும்பூஞ்சை வைரஸ் தொற்று உள்ளதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் இந்த வைரஸ் தொற்றாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மருத்துவ வல்லுநர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு வரும் நான்கு லட்சத்தி இருபதாயிரம் கொரோனா தடுப்பு ஊசிகளையும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் எனவும் நாளை தடுப்பூசி அனைத்து மாவட்டங்களிலும் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!