Tamilnadu
கொரோனாவை அடுத்து பூஞ்சை நோய்க்கும் மாநிலம் முழுவதும் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது - அமைச்சர் தகவல்!
கரும்பூஞ்சை வைரஸ் தொற்றை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கரும்பூஞ்சை வைரஸ் பரிசோதனை மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை அறிந்துகொள்ளும் டிஜிட்டல் பலகை மற்றும் கரும்பூஞ்சை பரிசோதனை மையத்தில் தொடங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தில் இதுவரை 518 பேருக்கு கரும்பூஞ்சை வைரஸ் தொற்று உள்ளதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் இந்த வைரஸ் தொற்றாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மருத்துவ வல்லுநர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு வரும் நான்கு லட்சத்தி இருபதாயிரம் கொரோனா தடுப்பு ஊசிகளையும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் எனவும் நாளை தடுப்பூசி அனைத்து மாவட்டங்களிலும் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!