Tamilnadu
கொரோனாவை அடுத்து பூஞ்சை நோய்க்கும் மாநிலம் முழுவதும் பரிசோதனை மையம் தொடங்கவுள்ளது - அமைச்சர் தகவல்!
கரும்பூஞ்சை வைரஸ் தொற்றை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கரும்பூஞ்சை வைரஸ் பரிசோதனை மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உடல்நிலை அறிந்துகொள்ளும் டிஜிட்டல் பலகை மற்றும் கரும்பூஞ்சை பரிசோதனை மையத்தில் தொடங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தமிழகத்தில் இதுவரை 518 பேருக்கு கரும்பூஞ்சை வைரஸ் தொற்று உள்ளதாகவும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் இந்த வைரஸ் தொற்றாளர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். மேலும் 24 மணி நேரமும் மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் மருத்துவ வல்லுநர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்திற்கு வரும் நான்கு லட்சத்தி இருபதாயிரம் கொரோனா தடுப்பு ஊசிகளையும் மக்கள் தொகைக்கு ஏற்ப மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் எனவும் நாளை தடுப்பூசி அனைத்து மாவட்டங்களிலும் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!