Tamilnadu
8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி:தமிழக அரசு ஆணை!
தமிழகத்தில் 8 மாவட்டங்களை தவிர 50% ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்த முழு ஊரடங்கில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் இந்த தடை தொடரும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒருமாதத்திற்குள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை 4 சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்துச் செல்லலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!