Tamilnadu
புழல் மத்திய சிறையிலிருந்து பேரறிவாளன் பரோலில் விடுவிப்பு!
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்ட்டு சுமார் 30 ஆண்டு காலமாக ஆயுள் தண்டனை கைதியாக புழல் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன் மருத்துவ காரணமாக பரோலில் விடுவிக்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அற்புதம்மாளின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் சிறையில் உள்ள பேரறிவாளனை மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு உரிய விதிகளை தளர்த்தி, 30 நாட்கள் விடுப்பு வழங்க கடந்த 19ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் இன்று காலை பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் இருந்து பரோலில் விடுவிக்கப்பட்டு ஜோலார்பேட்டை உள்ள அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேரறிவாளனின் பரோல் நடவடிக்கைக்கு உடனடியாக உதவிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பலரும் நன்றித் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!