Tamilnadu
சென்னை மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள்!
தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினரும் உபகரணங்கள் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ தாயகம் கவி ஆகியோர் இணைந்து 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சென்னை தொடர்ந்து தொற்று எண்ணக்கை வேகமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!