Tamilnadu
சென்னை மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள்!
தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினரும் உபகரணங்கள் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ தாயகம் கவி ஆகியோர் இணைந்து 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சென்னை தொடர்ந்து தொற்று எண்ணக்கை வேகமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஒரு மாவட்டத்தில் மட்டும்.. 18 நாட்களில்.. 17 போக்சோ வழக்குகள்” - அதிரவைக்கும் தகவல்களின் முழு விவரம்!
-
“FIFA WorldCup.. ‘கால்பந்து குழந்தை இயேசு’ ரசிகர்களின் அளவிலா அன்பு” - சுவாரசிய சம்பவத்தின் பிண்ணனி!”
-
“கம்பீர் தேவையில்லை.. இந்திய அணிக்கு தோனியை கொண்டு வாருங்கள்… முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து!”
-
இட்டுன்னு போயி இட்டுன்னு வருவதுதான் அமைச்சரின் வேலை என நினைக்கிறாரா? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
“அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து மேகதாது அணை முயற்சியைத் தடுப்போம்!” : உதயநிதி!