Tamilnadu
சென்னை மாநகராட்சிக்கு 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏக்கள்!
தமிழக அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கையால், தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பினரும் உபகரணங்கள் வழங்கி உதவி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ தாயகம் கவி ஆகியோர் இணைந்து 80 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் சென்னை தொடர்ந்து தொற்று எண்ணக்கை வேகமாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“சென்னையில் ஓமந்தூர் ராமாசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா? : பழனிசாமிக்கு அமைச்சர் MRK கேள்வி!