Tamilnadu
மீனம்பாக்கத்தில் கோவிட் சித்தா மருத்துவ மையம் திறப்பு: விரைவில் 33 மையங்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வரும் நிலையில், சித்தா மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் முதல்கட்டமாக வியாசர்பாடியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
140 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவ மையத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துப் பார்வையிட்டார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.
தற்போது 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை 33 சித்தா சிகிச்சை மையங்களாக அதிகரிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்ற ரூ.8,000 கோடி ஒதுக்கீடு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
சென்னையில் ரூ.13.56 கோடியில் நவீன வசதிகளுடன் ‘முதல்வர் திருமண மாளிகை’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“இனி ‘கருணை’ இல்லை! ‘உரிமை’தான்!” : ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நன்றி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!