Tamilnadu
மீனம்பாக்கத்தில் கோவிட் சித்தா மருத்துவ மையம் திறப்பு: விரைவில் 33 மையங்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வரும் நிலையில், சித்தா மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் முதல்கட்டமாக வியாசர்பாடியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
140 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவ மையத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துப் பார்வையிட்டார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.
தற்போது 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை 33 சித்தா சிகிச்சை மையங்களாக அதிகரிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!