Tamilnadu
மீனம்பாக்கத்தில் கோவிட் சித்தா மருத்துவ மையம் திறப்பு: விரைவில் 33 மையங்கள்-முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வரும் நிலையில், சித்தா மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனடிப்படையில் முதல்கட்டமாக வியாசர்பாடியில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
140 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சித்தா மருத்துவ மையத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துப் பார்வையிட்டார். அப்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.
தற்போது 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை 33 சித்தா சிகிச்சை மையங்களாக அதிகரிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!