Tamilnadu

தமிழகத்தில் இன்று 810 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று... ஒரே நாளில் 195 பேர் உயிரிழப்பு! #CovidUpdates

இன்று சென்னையில் 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,70,596 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 24,898 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,97,500 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,44,948 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,35,45,987 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 6,678 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,70,596 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டத்தில் 2,068பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,039 பேருக்கும் திருவள்ளூரில் 1,560 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 21,546 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,51,058 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,31,468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 195 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 81 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 114 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 14,974 ஆக அதிகரித்துள்ளது.

Also Read: அதிகரிக்கும் கொரோனா பரவல்: RT-PCR சோதனைக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளிட்ட ICMR!