Tamilnadu
“அரசு நிலத்தை மோசடியாக விற்ற அ.தி.மு.க அமைச்சர்” - ரூ. 1,575 கோடி ஊழல் செய்ததாக புகார்!
சென்னை தலைமை செயலகத்தில் மருதுசேனை சங்கத்தின் தலைவர் கரு.ஆதி நாராயணன் உள்ளிட்டோர் தமிழக தலைமை செயலரிடம் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது நிலமோசடி புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதி நாராயணன், “வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கோயம்பேடு அருகே அரசுக்கு சொந்தமான ரூபாய் 1,575 கோடி மதிப்பிலான 10.5 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு எந்தவித சட்டதிட்டங்களையும் பின்பற்றாமல் விற்றுள்ளார்.
அரசு நிலத்தை அரசுப்பள்ளி கட்ட அல்லது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிலத்தை பயன்படுத்தலாமே தவிர, யாருக்கும் விற்கக்கூடாது என விதி உள்ள நிலையில், அமைச்சர் குறுகிய கால அளவில் ஒப்புதல் கொடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் 1,575 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது.
கொரோனா காலத்தில் அணியக்கூடிய முகக் கவசத்தில் ஊழல், சுகாதாரத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.
அரசு நிலத்தை மோசடி செய்த ஆர்.பி.உதயகுமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருதுசேனை சங்கம் சார்பில் தலைமை செயலாளர் உதவியாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!