Tamilnadu
கள்ளக்குறிச்சி அருகே போலிஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த நபர் கைது... அவர் சொன்ன விநோத காரணம்..?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் போலிஸ் வேடமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் போலிஸ் வேடமணிந்து ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் போலிஸ் வேடத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் சென்னை அமைந்தகரையை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் கஜேந்திரன் என்பதும், அவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தனியாக நின்று கொண்டிருக்கும் பொதுமக்களிடமும் தனியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் போலிஸ் என கூறி பணத்தை பறித்துச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் முப்பத்தி இரண்டாயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
தனது மகள் திருமணம் செய்து முடித்த பின்பு கடன் தொல்லை அதிகமானதால், கடனை அடைப்பதற்காக வேறு வழி தெரியாமல் இதுபோன்ற மோசடி வேலையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!