Tamilnadu
கள்ளக்குறிச்சி அருகே போலிஸ் வேடமிட்டு வழிப்பறி செய்த நபர் கைது... அவர் சொன்ன விநோத காரணம்..?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் போலிஸ் வேடமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் போலிஸ் வேடமணிந்து ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து போலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் போலிஸ் வேடத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் சென்னை அமைந்தகரையை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் கஜேந்திரன் என்பதும், அவர் உளுந்தூர்பேட்டை பகுதியில் தனியாக நின்று கொண்டிருக்கும் பொதுமக்களிடமும் தனியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் போலிஸ் என கூறி பணத்தை பறித்துச் செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூபாய் முப்பத்தி இரண்டாயிரம் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
தனது மகள் திருமணம் செய்து முடித்த பின்பு கடன் தொல்லை அதிகமானதால், கடனை அடைப்பதற்காக வேறு வழி தெரியாமல் இதுபோன்ற மோசடி வேலையில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!