Tamilnadu
டாஸ்மாக் கடையில் ஆம்லேட்டை பறித்துச் சாப்பிட்டதால் ஆத்திரம் : கழுத்து நெறித்து கொலை செய்த கொடூரம்!
சென்னையை அடுத்த வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வெளியே வரும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை வழி மறித்துள்ளனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கிருஷ்ணமூர்த்தி எட்டி உதைத் தாக்குதல் நடத்தினார். இதில் கிழே விழுந்த அன்பழகனை, போதையின் இருந்த அந்த நபர் காலால் கழுத்தை மிதித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆணின் சடலம் ஒன்று சாலையில் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அன்பழகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அன்பழகனை காலால் மதித்து கொலை செய்த நபர் சென்னை அசோகா தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி என்று தெரிய வந்தது.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில், மதுக்கடையில் ஆம்லேட்டை எடுத்தால், ஆத்திரத்தில் அன்பழகனைக் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் சம்பவம் நடந்தபோது கிருஷ்ணமூர்த்தியுடன் இருந்த அப்பு என்பதை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தோனி ஏன் மைதானத்திற்கு வருவதில்லை.. பயிற்சியாளர் மைக்கல் ஹசி சொன்ன காரணம்” : முழு விவரம் அறிக!
-
குமார ராணி முனைவர் மீனா முத்தையா மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பயணிகள் பயணம் : ஒரே நாளில் இவ்வளவு பேரா?- மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்!
-
”கொத்தடிமை ஒழிப்பு நடவடிக்கை.. இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு”! - முழு விவரம்!
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!