Tamilnadu
"எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு?" : தோல்வி பயத்தில் குளறுபடியில் ஈடுபடும் அ.தி.மு.க-பா.ஜ.க!
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்ட மன்ற தொகுதிகளுக்கான பொது தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது. பல இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுங்கான்கடை அரசு துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் நடந்த வாக்குப்பதிவில் வாக்கு பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு பதிவாகுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் அடுத்தடுத்து மூன்று முறை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்துள்ளது. நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கோளாறு காணப்பட்டதால், வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தகவல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தடுத்து நிறுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய விடாமல், செய்தியாளர்களை கைது செய்யப்போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இயந்திரங்களை மாற்றி புதிய இயந்திரங்களை கொண்டு வந்து வாக்குப்பதிவை மீண்டும் தொடங்கினர். ஏற்கனவே பதிவான வாக்குகளின் நிலை என்ன என்று வாக்குச்சாவடி முகவர்களும், வாக்காளர்களும் கேள்வி எழுப்பிய நிலையில், முதலில் வாக்களித்தவர்களை அழைத்து வந்து மீண்டும் ஒட்டு போடுங்கள் என வாக்குச்சாவடி அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
+2 தேர்வு முடிவுகள் : “குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
சாதிய வன்கொடுமைக்கு சாட்டையடி : +2 தேர்வில் நாங்குநேரி மாணவர் சாதனை!
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்துக்கு: இ-பாஸ் விவரத்தை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!
-
”பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்பு” : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கண்டனம்!