Tamilnadu
“தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க - அ.தி.மு.க அரசு நடந்துக்கொள்கிறது” : எ.வ.வேலு குற்றச்சாட்டு!
தி.மு.க முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான எ.வ.வேலு தனது சொந்த கிராமமான சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்.
திருவண்ணாமலையில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும். இந்த தேர்தலை எப்படி எல்லாம் சீர்குலைக்க வேண்டுமோ அந்த நோக்கில் பாரதிய ஜனதா கட்சி சீர்குலைக்கும் நோக்கில் நடந்துகொள்கிறது.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக , பா.ஜ.க கட்சியினர் நேற்று முதல் வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களை சந்தித்து மே 3ம் தேதி அந்த டோக்கனை கொடுத்து 4 கிராம் தங்கம் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறி ஒரு டோக்கன் வழங்கி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!