Tamilnadu
“இவங்கதான் உடைஞ்ச பர்னிச்சர்களை சரிசெய்ய போறாங்களா?”- மதுவந்தி பிரசாரத்தால் அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்
தமிழகத்தில் வருகிற 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் ஆதரவு மற்றும் கருத்துக்கணிப்பு வரை அனைத்துமே தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தேர்தலில் எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி பல்வேறு குளறுபடிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் முதல் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கோவை வந்தபோது, விதிகளை மீறி பா.ஜ.கவினர் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். டவுன்ஹால் பகுதியில் செல்லும் போது அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்கச் சொல்லி பா.ஜ.கவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கிருந்த மசூதிக்கு அருகில் நின்று வெறுக்கத்தக்க வகையில் கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். இதனிடையே அங்கிருந்த காலணி கடையின் மீது பா.ஜ.கவினர் கற்களை வீசி கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்துள்ளனர்.
இதற்கிடையே பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேசும் எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன், மதுவந்தி ஆகியோரை பிரச்சாரத்திற்கு அழைக்க அ.தி.மு.கவினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற கலவரத்தை சரிகட்ட முடியால் தினறி வரும் பா.ஜ.க, தற்போது பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேச மதுவந்தியை அழைத்துள்ளனர்.
தலித், இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் மதுவந்தியை தேர்தல் நேரத்தில் பேச அழைத்து வந்தது பா.ஜ.கவினர் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?