Tamilnadu
“இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா, உங்களுக்கு நல்ல சாவே வராது” : சாபம் விட்ட அ.தி.மு.க வேட்பாளர்!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அ.தி.மு.க-வினர் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், “10 வருடமாக ஆட்சியில் இருந்து எதுவும் செய்யாமல், இப்ப ஓட்டு கேக்க வந்துட்டீங்களா?” என அ.தி.மு.க வேட்பாளர்களை பொதுமக்களே விரட்டியடிக்கின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர், “இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா நல்ல சாவே சாவமாட்டீங்க” என்று சாபம் விட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மோகனூரில் நடைபெற்ற அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கே.பி.பி.பாஸ்கர் உரையாற்றுகையில், "இரட்டை இலைக்கு ஓட்டு போடலைனா நல்ல சாவே சாவமாட்டீங்க. உங்களுக்காக இத்தனை திட்டங்களை அறிவிச்ச பின்னரும் ஓட்டு போடலைனா நன்றி மறந்தவங்களா ஆயிடுவீங்க. நாமக்கல் தொகுதி நன்றி கெட்ட தொகுதி என்ற பெயரை மக்கள் வாங்க வேண்டாம் '' என்று சாபம் விட்டுள்ளார். இவரது பேச்சு தொகுதி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!