Tamilnadu
“அ.தி.மு.கவின் தலையில் சவாரி செய்து தமிழகத்தில் கால் பதிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது” : இரா.முத்தரசன் சாடல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள் மாநில குழு ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “பா.ஜ.க என்பது பேராபத்துக்குரிய கட்சியாகும். அந்த பேராபத்துக் குரிய கட்சி தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது.
அ.தி.மு.கவின் பலவீனத்தை பயன்படுத்தி, அதிமுகவின் தோள் மீது இல்லாமல், தலையில் சவாரி செய்து கொண்டு தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
அரசியலமைப்பு சட்டத்தின் மீதே நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் வகுப்புவாத கட்சியை தோற்கடிக்க வேண்டும். மேலும் வகுப்புவாத கட்சியை ஆதரிக்கும் கட்சியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் ஒரு மகத்தான அரசியல் போராக இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம்.
தமிழகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த அரசியல் போரை முன்னெடுத்துள்ளோம். நடைபெற உள்ள இந்த தேர்தலை முழுக்க முழுக்க சொந்த பலம், கூட்டணி பலம் என எதையும் நம்பாமல் பண பலத்தை மட்டுமே நம்பி அ.தி.மு.க இருப்பதாகவும், பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் தான் அவர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதை நிராகரிப்பார்கள். அதிமுகவின் கனவு பகல் கனவுதான் என அவர் தெரிவித்தார்.
Also Read
-
இந்திய கிரிக்கெட் அணி படைத்த இமாலய சாதனை... மிரட்டிய இஷான் கிஷனின் ஆட்டம்! நாலாபுறமும் சிதறிய பந்துகள்!
-
துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் - பெரும் அநீதி: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்
-
நீக்கப்படும் 16,000 பணியாளர்கள்? அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் அமேசான்... திணறும் ஊழியர்கள்!
-
“எலும்பில்லா நாக்கு எப்படியும் பேசும்” : பிரதமர் மோடியின் உரைக்கு மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் : நன்றி தெரிவித்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்!