Tamilnadu
"அ.தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்வோம்" - மக்கள் அதிகாரம் வேண்டுகோள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க கூட்டணியையும், பெரியார், திராவிட சித்தாந்தத்தை அழிக்க முயற்சிக்கும் கமல், சீமான் ஆகியோரையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தில், "கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காகவும், மதவாதத்தை அமல்படுத்திவரும் பா.ஜ.கவையும், இவர்களுடன் கைகோர்த்துள்ள அ.தி.மு.க மற்றும் பா.ம.க கூட்டணியை இந்தத் தேர்தலில் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
அதே போல ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், பெரியார், திராவிட கருத்துகளைச் சிதைக்க முயற்சித்து, பா.ஜ.க விற்கு ஆதரவாக செயல்படும் கமல்ஹாசன், சீமான் போன்றோரையும் புறக்கணிக்க வேண்டும். பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலையில், அ.தி.மு.க மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளாக, பா.ஜ.கதான் தமிழகத்தை ஆட்சி செய்து, மாநில உரிமைகளைப் பறித்து வருகிறது. தற்போது தமிழகத்தையும் அடிமையாக்கும் திட்டத்துடன் இவர்கள் கூட்டணி சேர்ந்து தேர்தலில் களமிறங்கியுள்ளனர். எனவே தமிழக மக்கள் பா.ஜ.க-அ.தி.மு.கவின் கூட்டணி கட்சிகளை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!