Tamilnadu
இப்படி ஒரு கூட்டணியை எங்காவது கண்டதுண்டா யுவர் ஹானர்? : தொகுதிக்காக அடித்துக்கொள்ளும் அ.தி.மு.க - பா.ஜக!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கைகள், வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில், பா.ம.க-வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகியது. இதனால் தொகுதிகளை இறுதி செய்வதில் அ.தி.மு.க கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த இழுபறிக்கு இடையே, அ.தி.மு.கவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் விதத்தில் பழனி, புதுக்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.கவினர் தேர்தல் பரப்புரையைத் துவங்கி, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.கவினரின் இந்த அடாவடி செயல் அ.தி.மு.கவினர் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியை பா.ஜ.க கேட்பதை அறிந்த, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனின் ஆதரவாளர்கள், மாவட்ட அலுவலகம் முன்பு திரண்டு, பா.ஜ.கவுக்கு கோவை தெற்கு தொகுதியை கொடுக்கக் கூடாது எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பா.ஜ.கவுக்கு கோவை தெற்கு தொகுதியைக் கொடுத்தால், கட்சியிலிருந்தும் அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகுவதாக கூறி, நிர்வாகிகள் திரண்டதால் அ.தி.மு.க மாவட்ட தலைமை என்ன செய்வது என்று தெரியாமல் திணறி நின்றது.
அ.தி.மு.கவினரின் இந்த ஆர்ப்பாட்டம் பா.ஜ.க, அ.தி.மு.கவுக்கு இடையே ஒரு சுமுகமான உறவு இல்லை என்பதையே காட்டுகிறது. இதுவே இவர்களின் தோல்விக்கு விதையாகிவிட்டதாக கோவை முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
Also Read
- 
	    
	      பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !