Tamilnadu
நிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை!
அ.தி.மு.க ஆட்சியில் உயர்மட்டத்திலிருந்து கீழ்மட்ட அதிகாரிகள் வரை லஞ்சம் ஊழலில் திளைத்து வருகின்றனர். பணி வழங்குவதற்கும், அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் லஞ்சம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஊழல் அ.தி.மு.க ஆட்சியில் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது வேளாண்மை அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியில் உள்ள 40 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் நெல்லை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்குமா என விவசாயிகள் காத்திருக்கும் நிலையில் வேளாண்மை உதவி அலுவலர் தாமரைச்செல்வன் என்பவர் அறுவடை கணக்கீடு செய்த பின்பு தொடர்ந்து விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “வேளாண்மை உதவி அலுவலர் தாமரைச்செல்வன் கட்டுபாட்டில் 14 ஊராட்சிகள் உள்ளன. நிவாரணம் மற்றும் பயீர்க் காப்பீடு குறித்து கேட்டால் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கிறார்.
வேளாண்மை உதவி அலுவலர் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாாிகள் முறையாக விசாரணை நடத்தவேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!