Tamilnadu
எரிபொருள் விலை உயர்வு : மோடி அரசை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி நூதன போராட்டம்!
நாளுக்கு நாள் உயர்ந்திடும் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை இராயபுரம் தொகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை பாண்டியன் திரையரங்கம் அருகே எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சவப்பெட்டியில் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மண் அடுப்பில் விறகு வைத்தும் சிலிண்டரில் மோடி படத்தை வைத்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு, 2014 மற்றும் 2021ஆம் ஆண்டில் எரிபொருள் விலை நிலவரத்தை விளக்கும் படம், கார்ட்டூன்கள் இடம்பெற்ற பதாகைகளை கையில் ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இருசக்கர வாகனம், ஆட்டோ, சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!