Tamilnadu
விளம்பரத்திற்கு கோடிகோடியாக கொட்டும் அ.தி.மு.க அரசிடம் தூய்மைப் பணியாளருக்கு சம்பளம் கொடுக்க பணமில்லையா?
மதுரை மாவட்டம், வண்டியூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். மேலும் கடந்த சில மாதமாக மாவட்ட ஆட்சியர் ஆவலவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பகல் முழுவதும் ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வேலை முடிந்தவுடன், வீட்டிற்குச் செல்லாமல், ஆட்சியர் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். இதையடுத்து நேற்று பாதுகாப்புப் பணிக்கு வந்த காவல்துறையினர் ஆட்சியர் அலுவலக மாடிக்குச் சென்றுள்ளனர். அப்போது, வேல்முருகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், இது குறித்து தல்லாகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த காவல்துறையினர் வேல்முருகனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேல்முருகனுடன் பணியாற்றிய, மற்ற தூய்மைப் பணியாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த வேல்முருகனுக்கு கடந்த 8 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை, இதனால் இவரின் குடும்பம் வறுமையில் வாடியதால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை செய்து கொண்டதாக இவருடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் நெருங்குவதால் விளம்பரங்களுக்கு கோடி கோடியாகச் செலவழிக்கும் அ.தி.மு.க அரசு வேல்முருகனுக்கு மாதாமாதம் ஊதியம் கொடுத்திருந்தால், இந்த விபரீத முடிவு எடுக்காமல் இருந்திருப்பார். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க அரசின் அலட்சியமே வேல்முருகனின் தற்கொலைக்குக் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!