Tamilnadu
பெட்ரோலுக்கு நிகராக உயரும் டீசல் விலை.. கார்ப்பரேட்டுகளுக்காக சாமானியர்களை சக்கையாக பிழியும் மோடி அரசு!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், கடந்த ஆண்டு மே மாதம் வரை கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூன் 2020 முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருகின்றன.
அவ்வகையில், கடந்த 8 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை உச்சத்தை அடைந்து வருகிறது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சதம் அடித்துள்ளது பெட்ரோல் விலை. அதேபோல தமிழகத்திலும் 90 ரூபாயை தாண்டியுள்ளது பெட்ரோல் விலை. அது போக, பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்றைய நிலவரப்படி 91.62 ரூபாய் என விற்பனை ஆன பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து இன்று 91.92 ரூபாய் என விற்பனை ஆகிறது. டீசல் விலை நேற்று 84.86 ரூபாய் விற்பனை ஆன நிலையில், 40 காசுகள் அதிகரித்து 85.26 ரூபாய் என விற்பனை ஆகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
இவ்வாறு தினந்தோறும் உயரும் பெட்ரோல் டீசல் விலையால் நடுத்தர மக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் மோடி அரசின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் என பல தரப்பில் இருந்து கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!