Tamilnadu
“வெறும் அறிவிப்புக்கள் எப்படி சாதனையாகும்?” : ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக ப.சிதம்பரம் சாடல்!
சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்துக்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியில், குறிப்பாக கடந்த 3 மாதங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வரும் திட்டங்கள் எல்லாம் மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, தீபாவளி மத்தாப்பூ போன்றது; அதனால், மக்களுக்கு எந்த பயனுமில்லை.
அதுமட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை திட்டங்களை அறிவித்துள்ளனர். ஆனால், அதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. மேலும், இலவச மின்சார வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். முதல்வர் அவர்களே, அதற்கான நிதி எங்கே?
இந்த வெறும் அறிவிப்புக்கள் எப்படி சாதனையாகும்?. தேர்தல் நெருங்குவதால் ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது. அதற்கு ஊடகங்களில் ஆளும் கட்சி அளிக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதே சான்று” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!