Tamilnadu
நிலத்தை அபகரிக்க தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: அ.தி.மு.க பிரமுகருக்கு 8 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு!
தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய வழக்கில் எட்டு ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க பிரமுகருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் கே.வி.கேகுப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பன் தனது மைத்துனர் வைத்தியநாதனின் ஸ்வீட் கடையை அபகரிக்கத் திட்டமிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 2013ஆம் ஆண்டு அவரது மனைவி சிவகாமி தொடர்ந்த வழக்கில் நேற்று பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நில அபகரிப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நேற்று தீர்ப்பு வந்ததை அடுத்து எண்ணூர் போலிஸார் அஞ்சப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!