Tamilnadu
நிலத்தை அபகரிக்க தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: அ.தி.மு.க பிரமுகருக்கு 8 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு!
தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய வழக்கில் எட்டு ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க பிரமுகருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் கே.வி.கேகுப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பன் தனது மைத்துனர் வைத்தியநாதனின் ஸ்வீட் கடையை அபகரிக்கத் திட்டமிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 2013ஆம் ஆண்டு அவரது மனைவி சிவகாமி தொடர்ந்த வழக்கில் நேற்று பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நில அபகரிப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நேற்று தீர்ப்பு வந்ததை அடுத்து எண்ணூர் போலிஸார் அஞ்சப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!