Tamilnadu
நிலத்தை அபகரிக்க தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: அ.தி.மு.க பிரமுகருக்கு 8 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு!
தற்கொலை செய்துகொள்ளத் தூண்டிய வழக்கில் எட்டு ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க பிரமுகருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் கே.வி.கேகுப்பம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பன் தனது மைத்துனர் வைத்தியநாதனின் ஸ்வீட் கடையை அபகரிக்கத் திட்டமிட்டு தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 2013ஆம் ஆண்டு அவரது மனைவி சிவகாமி தொடர்ந்த வழக்கில் நேற்று பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் அஞ்சப்பனுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொன்னேரி கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நில அபகரிப்பு மற்றும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நேற்று தீர்ப்பு வந்ததை அடுத்து எண்ணூர் போலிஸார் அஞ்சப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!