Tamilnadu
KV பள்ளிகளில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி.. ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை - RTI மூலம் அம்பலம்!
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கையில், அரசு திட்டங்களை அறிவிக்கும் போது என திருக்குறளை கூறிவிட்டு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தொடர்ந்து திணிக்கும் வேலைகளில் மத்திய மோடி அரசு ஈடுபட்டு வருகிறது என பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி அளித்திருக்கும் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கம் கடந்த ஜனவரி 25ம் தேதி பதிலளித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. அதில், “தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் 6ம் வகுப்பு மேல் தமிழ் மொழி கட்டாயப்பாடம் இல்லை.
மாறாக இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் தேர்ச்சியானால் மட்டுமே 6ம் வகுப்பில் இருந்து 7ம் வகுப்புக்கு செல்ல முடியும். 49 பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை. தமிழை தவிர பிற செம்மொழிகளும் கற்பிக்கப்படுவதில்லை. சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழை மொழி பாடமாக படிக்க இயலாது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!