Tamilnadu
17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் (37). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் அப்பகுதியின் பா.ஜ.க பிரமுகர் ஆகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் 12வது படிக்கும் 17 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார்.
கோரோன காலத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்த காரணத்தால் இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில் அந்த சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார் இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘‘இதுதான் RSS, பாஜக ஆட்சி” - முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்க்க மறுத்த உ.பி. அரசுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace... தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விவரங்களுடன் அறிக்கை!
-
“முஸ்லீம்-குலாம் சிகிச்சை பார்க்க முடியாது..” -கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த உ.பி அரசு மருத்துவர்!
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !