Tamilnadu
17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் (37). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் அப்பகுதியின் பா.ஜ.க பிரமுகர் ஆகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் 12வது படிக்கும் 17 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார்.
கோரோன காலத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்த காரணத்தால் இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில் அந்த சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார் இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!
-
“திறக்கப்படாத மேட்டூர் அணையால் வேதனையின் உச்சத்தில் விவசாயிகள்!” : தவெக அரசுக்கு திமுக கண்டனம்!
-
“டெல்லி சென்று கழக அரசின் சாதனைகளுக்கு Sticker ஒட்டியிருக்கிறது SofaModel அரசு” : உதயநிதி ஸ்டாலின் பளார்!