Tamilnadu
17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர் போக்ஸோ சட்டத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ் (37). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மணியகாரம்பாளையம் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
இவர் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர் அப்பகுதியின் பா.ஜ.க பிரமுகர் ஆகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இவரது வீட்டின் அருகே குடியிருந்து வரும் 12வது படிக்கும் 17 வயது மாணவியிடம் பழகி வந்துள்ளார்.
கோரோன காலத்தில் பள்ளிகள் விடுமுறையில் இருந்த காரணத்தால் இவர் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்தில் அந்த சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார் இதையடுத்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
-
“விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சமூக விரோத சட்டங்கள் : தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஒன்றிய அரசு - முரசொலி!
-
ரூ.50 இலட்சத்தில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவனுக்கு திருவுருவச் சிலை... திறந்து வைத்தார் முதலமைச்சர் !
-
“தமிழ்நாட்டில் பொய்யும், ஒப்பனையும், கற்பனையும் ஒருபோதும் நீடிக்காது” - RN ரவிக்கு கி.வீரமணி பதிலடி!